ஏரிகளில் பனைவிதை நடவு செய்யும் நிகழ்ச்சி

காரிமங்கலம், செப்.12: காரிமங்கலம் அருகே மல்லிகுட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ராமியம்பட்டி, நிம்மாங்கரை ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில், நெடுஞ்சாலை துறை சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது. நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் மங்கையர்க்கரசி தலைமையில், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏரிக்கரை பகுதியில் பனை விதைகளை நட்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் நட்ட நிலையில், மேலும் பல ஏரிகளில் பனை விதை நட உள்ளதாக, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் ரஞ்சித்குமார், சாலை ஆய்வாளர்கள் வில்லியம், அந்தோணி, ஆதிமூலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஏரிகளில் பனைவிதை நடவு செய்யும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: