அடுத்தமாதம் ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கையை உயர்த்தியது டிஎன்பிஎஸ்சி: தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சி

சென்னை: குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் காலி பணியிடங்கள் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி நேற்று அதிரடியாக உயர்த்தியது. இதனால் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பதவிகளில் கிராம நிர்வாக அலுவலர்-108 (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனிச் செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, கிளர்க்- 3, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர் மற்றும் வன காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.இப்பதவிக்கான எழுத்து தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வை, 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியிடப்படும் என்று அண்மையில் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. இந்த நிலையில், குரூப்-4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை நேற்று டிஎன்பிஎஸ்சி உயர்த்தியுள்ளது. அதாவது 480 எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி இளநிலை உதவியாளர் பதவியில் 128 பணியிடங்களும், தட்டச்சர்-14, சுருக்கெழுத்து தட்டச்சர்-15, கணக்காளர்-1, உதவியாளர்-3, இளநிலை கணக்கு உதவியாளர்-8, வன பாதுகாவலர் மற்றும் வன காவலர்-70, பில் கலெக்டர்-47, உதவி விற்பனையாளர்-194 என 480 பணியிடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post அடுத்தமாதம் ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கையை உயர்த்தியது டிஎன்பிஎஸ்சி: தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: