ஓணம் பண்டிகை எதிரொலி: பொள்ளாச்சி சந்தையில் மாடு விற்பனை மந்தம்


பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று மாலை மாட்டு சந்தை நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆந்திராவில் இருந்து வழக்கமாக மாடு வரத்து அதிகரித்து இருக்கும். ஆனால் நேற்று வரத்து குறைவாகவே இருந்தது. இந்நிலையில் கேரளாவில் வரும் 15ம் தேதி ஓணம் பண்டிகை என்பதால், கேரள வியாபாரிகள் மாடு வாங்க குறைவாகவே வந்திருந்தனர். இதன் காரணமாக விற்பனை மந்தமாகி கடந்த வாரத்தைவிட குறைவான விலைக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

இதில் காளை மாடு ரூ.35ஆயிரம் வரையிலும், எருமை ரூ.36ஆயிரத்துக்கும், பசு ரூ.32ஆயிரத்துக்கும், வெளியூர் காளை மாடுகள் ரூ.40ஆயிரத்துக்கும். கன்று குட்டிகள் ரூ.12ஆயிரம் முதல் ரூ.13ஆயிரம் வரையிலும் என கடந்த வாரத்தைவிட ரூ.3ஆயிரம் முதல் ரூ.5ஆயிரம் வரையிலும் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. கடந்த மாதத்தில் ரூ.1.80 கோடிக்கு மாடுவிற்பனை இருந்தது. ஆனால் நேற்று, ரூ.1 கோடிக்கும் குறைவாக வர்த்தகம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ஓணம் பண்டிகை எதிரொலி: பொள்ளாச்சி சந்தையில் மாடு விற்பனை மந்தம் appeared first on Dinakaran.

Related Stories: