சென்னை மதுரவாயல் அருகே மாநகர பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் ஒட்டுநர் கைது

சென்னை: சென்னை மதுரவாயல் அருகே மாநகர பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் ஒட்டுநர் ஆரோக்கியராஜ் கைது செய்தனர். கவனக்குறைவாக பேருந்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதால் ஓட்டுநர் ஆரோக்கியராஜை போலீஸ் கைது செய்தது. செங்குன்றத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற தடம் எண் 104 பேருந்து ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது. பேருந்து விழுந்ததில் சர்வீஸ் சாலையில் சென்ற ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கி ஒட்டுநர் தினேஷ் உயிரிழந்தார்.

The post சென்னை மதுரவாயல் அருகே மாநகர பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் ஒட்டுநர் கைது appeared first on Dinakaran.

Related Stories: