பதும் நிசங்கா 53 ரன், குசால் மெண்டிஸ் 30 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். குசால் 39 ரன் எடுத்து அட்கின்சன் வேகத்தில் சோயிப் பஷிர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, நிசங்கா சதம் விளாசி அசத்தினார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். இலங்கை அணி 40.3 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. பதும் நிசங்கா 127 ரன் (124 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்), ஏஞ்சலோ மேத்யூஸ் 32 ரன்னுடன் (61 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நிசங்கா ஆட்ட நாயகன் விருதும், இங்கிலாந்தின் ஜோ ரூட் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
The post இங்கிலாந்து அணியுடனான 3வது டெஸ்டில் இலங்கை ஆறுதல் வெற்றி; பதும் நிசங்கா அபார சதம் appeared first on Dinakaran.