ஆற்றில் பாய்ந்த பஸ்: 20 பேர் படுகாயம்


திருமலை: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில் இருந்து அரசு பஸ் நர்சிபட்டினம் நோக்கி நேற்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 50 பேர் பயணம் செய்தனர். போரண்ணகுடேம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த ஆற்றில் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்தவர்களில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

இதனை கண்டதும் அங்கிருந்தவர்கள் பஸ்ஸில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை வாகனம் மூலம் தவலேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ்சில் பிரேக் பழுதானதால் விபத்து ஏற்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

The post ஆற்றில் பாய்ந்த பஸ்: 20 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: