பாலியல் தொழில் தலைவியுடன் தொடர்பு ; டிஎஸ்பி சஸ்பெண்ட்: வாட்ஸ்அப்பில் அழகிகளின் படங்கள் சிக்கியது


உளுந்தூர்பேட்டை: பாலியல் தொழில் கும்பல் தலைவியுடன் ெதாடர்பில் இருந்த டிஎஸ்பி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி சின்னசாமி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கி இருந்த கல்பனா (44) என்ற பெண் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை அழைத்து வந்து வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் படங்களை தொழிலதிபர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் கல்பனா, ஒரு சிறுமி, இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு இளைஞர்கள் என 6 பேரை கைது செய்தனர்.

கல்பனாவிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் நடத்திய விசாரணையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் படங்களை உளுந்தூர்பேட்டை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அனுப்பி வைத்து அவர்கள் விரும்பும் பெண்களுக்கு உண்டான தொகையை ஜி-பே மூலம் பெற்று அவர்கள் சொல்லும் இடத்திற்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி எஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு இந்த கும்பல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார்களா? அல்லது தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்களுடன் தொடர்பு வைத்து கமிஷன் அடிப்படையில் இந்த செயலில் ஈடுபட்டார்களா?

என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து செயல்பட்டு வரும் இந்த பாலியல் தொழில் கும்பலுடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்யவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கும்பல் தலைவி கல்பனாவுடன் தொடர்பில் இருந்த 126 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர். அதில், கல்பனாவின் வாட்ஸ்-அப் குழுவில் காவல் துறை அதிகாரி, தொழிலதிபர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், வழக்கறிஞர்கள், கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள் என பலரும் தொடர்பில் இருந்தது போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முக்கியமாக உளுந்தூர்பேட்டை டிஎஸ்பியாக இருந்த மகேஷ்,

சமீபத்தில் நாகப்பட்டினத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில் அவரும் கல்பனாவுடன் தொடர்பில் இருந்ததும், அவ்வப்போது டிஎஸ்பி மகேஷின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு பெண்களின் படங்கள் அனுப்பப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்ணுடன் டிஎஸ்பி இருந்ததும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து தற்போது நாகப்பட்டினம் டிஎஸ்பியாக உள்ள மகேஷை சஸ்பெண்ட் செய்து மத்திய மண்டல ஐஜி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பாலியல் தொழில் தலைவியுடன் தொடர்பு ; டிஎஸ்பி சஸ்பெண்ட்: வாட்ஸ்அப்பில் அழகிகளின் படங்கள் சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: