இப்புகார் மனு மீதான விசாரணைக்காக பத்திர எழுத்தர் நாகராஜன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா ஆகியோருக்கு நேற்று முன்தினம் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு வரவேண்டும் என சம்மன் அனுப்பியது. ஆனால், ஓ.ராஜா வேறு பணி இருப்பதால் விசாரணைக்கு வர இயலாது என தெரிவித்ததால் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, நேற்று மாலை பத்திர எழுத்தாளர் நாகராஜன் மற்றும் ஓ.ராஜா ஆகியோர் தேனி மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி முன் ஆஜராகினர். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, மீண்டும் வருகிற 10ம் தேதி விசாரணை நடத்தப்படும் எனவும், அன்றைய தினம் இருதரப்பும் நேரில் விசாரணைக்கு வரவேண்டும் என கூறி அனுப்பி வைத்தனர்.
The post ரூ.2.25 கோடி கேட்டு கொலை மிரட்டல் ஓபிஎஸ் தம்பியிடம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.