பெண் டிஎஸ்பி காயத்ரியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின்போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரியை போராட்டக்காரர்கள் தலைமுடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பெண் டிஎஸ்பி காயத்ரியை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்யுமாறும், காவல்துறையினர் உள்பட தமிழ்நாட்டில் அனைவருக்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறும் தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பெண் டிஎஸ்பி காயத்ரியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: