இதில், வழக்கத்திற்கு மாறாக ராக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டுகளும், டிரோன் மூலமாக வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெண் உட்பட 2 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் மணிப்பூரில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்றும், டிரோன் மூலம் 5 குண்டுகள் வீசப்பட்டதாகவும் போலீசார் கூறி உள்ளனர். மேலும் உயர் தொழில்நுட்ப டிரோன்களை இயக்க பயிற்சி பெற்றவர்களாக அவர்கள் இருப்பதால், இந்த விவகாரத்தை மணிப்பூர் போலீசார் தீவிரமாக கையில் எடுத்துள்ளனர்.
இம்பாலின் மேற்கு மாவட்ட எல்லை முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாநில உள்துறை கமிஷனர் அசோக் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
The post மணிப்பூரில் டிரோன் மூலம் தீவிரவாதிகள் குண்டுவீச்சு: 2 பேர் பலி, 9 பேர் காயம் appeared first on Dinakaran.