கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளம் பெண் கடந்த சனிக்கிழமையன்று தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சிகள் உடனே வைரலானது. இது பற்றி மெட்டா ஏஐ-யின் எச்சரிக்கை உபி போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் உள்ள சோசியல் மீடியா சென்டருக்கு வந்துள்ளது. இதையடுத்,போலீசார் விரைந்து சென்று அந்த தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்டனர் என்று மோகன்லால்கஞ்ச் உதவி ஆணையர் ரஜ்னீஷ் வர்மா தெரிவித்தார். பெண்ணின் புகாரை அடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
The post மெட்டா ஏஐ எச்சரிக்கையால் போலீசார் நடவடிக்கை தற்கொலைக்கு முயன்ற உபி இளம் பெண் காப்பாற்றப்பட்டார் appeared first on Dinakaran.