இதையடுத்து மழை காரணமாக சென்னை தீவுத்திடலில் நடைபெற இருந்த பார்முலா 4 கார் பந்தயம் நடத்த எஃப்.ஐ.ஏ. (FIA) சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் 4 மணிநேர கால நீட்டிப்பு வழங்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக முறையீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சென்னையில் ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்துவதற்கு சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) சான்றிதழ் பெறுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் 8 மணி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. 8 மணிக்குள் சான்று பெறாவிட்டால் பந்தயத்தை தள்ளிவைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். FIA சான்றிதழ் கிடைத்த பின்பே பந்தயம் நடத்தப்படும் என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது. எஃப்.ஐ.ஏ. சான்றிதழ் பெறப்பட்டு, அதை அடுத்து இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதற்கான எஃப்.ஐ.ஏ. சான்றிதழ் பெற இரவு 8 மணி வரை அவகாசம்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.