இதில் டால்வின் ராஜ், சுரேஷ் ஆகிய இருவரையும் இலங்கை கடற்படையினர் மீட்டு, முதலுதவி அளித்து, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட இந்த இருவரும், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் உதவியுடன், எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் கொடுக்கப்பட்டு, இலங்கையில் இருந்து விமானம் மூலம், சென்னை அழைத்து வரப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள், அந்த இரு மீனவர்களையும் வரவேற்று, உணவுகள் கொடுத்து, அவர்களின் சொந்த ஊருக்கு, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த கார் மூலம் அனுப்பி வைத்தனர். இதனிடையே கடலில் மூழ்கி மாயமான மற்ற இரு மீனவர்களான சுரேஷ், வெள்ளைச்சாமி என்கிற முனியாண்டி ஆகிய இருவரும் உயிரிழந்ததாக தெரியவந்தவுடன், அவர்களின் உடல்களை இலங்கை கடற்படை உதவியுடன் மீனவர்கள் தேடி மீட்டு, சொந்த ஊரான ராமேஸ்வரம் கொண்டு சென்றனர்.
The post கச்சத்தீவு அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து இலங்கை கடற்படை மீட்ட 2 மீனவர்கள் சென்னை திரும்பினர்: அதிகாரிகள் வரவேற்பு appeared first on Dinakaran.