சித்தூரில் மாணவர்கள் முன்பு விடுதியில் இரவு நேரத்தில் மது அருந்தும் காப்பாளர்

*வீடியோ வைரலால் பரபரப்பு

சித்தூர் : சித்தூரில் மாணவர்கள் முன்பு விடுதியில் இரவு நேரத்தில் காப்பாளர் மது அருந்தும் வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதி சாந்திபுரம் மண்டலம் கடப்பள்ளி அரசு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். மாணவர்களை பாதுகாப்பாகவும், நல்லொழுக்கங்களை கற்று தரவும் காப்பாளர் உள்ளார்.

ஆனால் இந்த விடுதியில் இருக்கும் காப்பாளர் இரவு நேரத்தில் மாணவர்கள் முன்பு அமர்ந்து மது அருந்துகிறார். இந்த சம்பவம் தினமும் நடக்கிறது. காப்பாளரை பார்த்து பல மாணவர்களும் குடிக்கு அடிமையாகி உள்ளனர் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.மேலும் இரவு நேரத்தில் விடுதியில் காப்பாளர் மது அருந்துவது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

சித்தூர் மாவட்டத்தில் சில அரசு பள்ளிகளில் மற்றும் விடுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக சமூக வலைதளங்களில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஏராளமான மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளனர். இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் இருப்பதும், சில குழந்தைகள் பள்ளியில் நடப்பது குறித்து, சில ஆசிரியர்களிடம் தெரிவித்தும், பள்ளி நிர்வாகம் எதுவும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எனவே மாவட்ட பள்ளி கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுதியில் காப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரவு நேரங்களில் மது அருந்துபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சித்தூரில் மாணவர்கள் முன்பு விடுதியில் இரவு நேரத்தில் மது அருந்தும் காப்பாளர் appeared first on Dinakaran.

Related Stories: