இதுகுறித்து வட்டாரங்கள் கூறுகையில்,‘‘ மாணிக்கம் தாகூரின் கோரிக்கைக்கு திரிணாமுல் எம்பி கல்யாண் பானர்ஜி ஆதரவு தெரிவித்தார். சாதி வாரியான கணக்கெடுப்பு குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுத வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பீகாரை சேர்ந்த ஐக்கிய ஜனதா தள எம்பி கிரிதாரி யாதவ், சாதி வாரி கணக்கெடுப்பு பற்றி நாடாளுமன்ற கமிட்டி கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்’’ என தெரிவித்தன. ஒன்றிய பாஜ அரசில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதாதளம் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதம் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து நிதிஷ் கட்சி வலியுறுத்தல் appeared first on Dinakaran.