கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசுகையில், வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதிருந்தே தயாராக வேண்டும். அதற்கான பணிகளை இன்றே தொடங்க வேண்டும். இளைஞர் அணியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்திட வேண்டும் என ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான என்.இ.கே.மூர்த்தி ஏற்பாட்டில் 18 வட்ட செயலாளர்களுக்கும் தலா ₹10 ஆயிரம் வீதம் ₹1 லட்சத்து 80 ஆயிரம் ஊக்க நிதியும், இளைஞர் அணிக்கு ₹20 ஆயிரம் ஊக்க நிதியும் வழங்கப்பட்டது.
இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், ஜெரால்டு, ராஜி, தொழுவூர் நரேஷ் குமார், எத்திராஜ், நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், நகர நிர்வாகிகள் குமார், சுதாகர், பிரதானம், தெய்வசிகாமணி, விநாயகம், ரங்கதுரை, பன்னீர்செல்வம், சாது, உமாபதி, ஜெகன், பொன் மனோகரன், துரைகோபால், கண்ணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு செயலாளர் பரிசமுத்து நன்றி கூறினார்.
The post திருவேற்காடு நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.