டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மாதிரி தேர்வு எழுதலாம்

 

விருதுநகர், ஆக.27: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான மாதிரி தேர்வுகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 2,327 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு வரும் செப்.14ல் நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் ஆக.28, செப்.2, செப்.6 ஆகிய நாட்களில் சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அல்லது ஆன்லைன் மூலம் https://forms.gle/JH6NeHJh8ETkv4qGA என்ற GOOGLE FORMஐ பூர்த்தி செய்து தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகை புரிந்து மாதிரி தேர்வினை எழுதி பயன்பெறலாம். இவ்வாறு தொவிக்கப்பட்டுள்ளது.

The post டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மாதிரி தேர்வு எழுதலாம் appeared first on Dinakaran.

Related Stories: