இதை சற்றும் எதிர்பார்க்காத பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பீர் பாட்டிலை வீசிய மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இருந்தாலும் போலீசார் விடாமல் துரத்தி சென்று பிடித்து விசாரணை நடத்தினர். அதில், துரைப்பாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் கோவர்தன் (36) என தெரியவந்தது. மது போதையில் இருந்த அவர், அறிவாலயம் மீது பீர் பாட்டிலை வீசியது தெரியவந்தது. அதனை தொடர்ந்து கோவர்தனை போலீசார் கைது செய்தனர்.
The post அண்ணா அறிவாலயம் அருகே பீர் பாட்டில் வீசிய அதிமுக பிரமுகர் கைது appeared first on Dinakaran.