பனங்கற்கண்டு மருத்துவ பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

எண்ணற்ற பயன்களை அள்ளித்தரும் பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனியை பதப்படுத்துவதினால் கிடைப்பது பனங்கற்கண்டு. இதில் மகத்தான மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளது.

*இதில் சுண்ணாம்புச் சத்து, இரும்பு, சாம்பல், புரதச்சத்துகள், மல்டி-வைட்டமின்களான துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் உள்ளது.

*பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்துவர மார்புச்சளி நீங்கும்.

*பனங்கற்கண்டை சுவைத்து உமிழ்நீரை சிறுக சிறுக விழுங்கி வர வாய் துர்நாற்றம், தொண்டைப்புண், வலி இவை நீங்கும்.

*உடல் உஷ்ணம், நீர் சுருக்கு, காய்ச்சலினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.

*இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

*கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண்களை குணப்படுத்தி ஆரோக்கியத்தை தருகிறது.

*இதை பானமாக அருந்துவதால் இதய நோய் குணமாகும். இதயம் வலுவடையும்.

*இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

*ஒரு டீஸ்பூன் சிறிய வெங்காயச் சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வர சிறுநீரகக் கோளாறுகள் முற்றிலும் குணமாகும்.

*கோடை வெயிலின் கொடுமைகளை தவிர்க்க இளநீருடன் பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து பானமாக அருந்தி வருவது சிறப்பு.

– ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

The post பனங்கற்கண்டு மருத்துவ பயன்கள்! appeared first on Dinakaran.

Related Stories: