பரவும் தொற்று நோய்கள்…

நன்றி குங்குமம் டாக்டர்

அலெர்ட் ப்ளீஸ்!

உலகெங்கும் பதினொரு நாடுகளில் எண்பது பேருக்கு மேல் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். இன்னும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

மேலும், உறுதி செய்யவியலாத நிலையில் வெவ்வேறு நாடுகளில் ஐம்பது பேருக்கு மேல் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது. ஆனால், இவர்கள் எந்த நாட்டவர்கள் என்ற விரிவான தகவல்கள் இல்லை. ஏற்கெனவே இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய பரவலின்போது ஐரோப்பிய கண்டத்தில் முதல் முறையாக பிரிட்டனில்தான் உறுதியானது.

குரங்கம்மை என்பது கொரோனா போல் புதிய நோய்க் கிருமி இல்லை. மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தொலைதூரப் பகுதிகளில் குரங்கம்மை பாதிப்பு அடிக்கடி நிகழ்வதுதான். இப்போது இது கண்டங்கள் கடந்து உலகம் முழுதும் பாதிப்பதுதான் பீதியைக் கிளப்பியுள்ளது. அடிப்படையில் இது ஒரு வைரஸ் தொற்றாகும். இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பு பெரும்பாலும் மிதமாகவே இருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சில வாரங்களிலேயே குணமடைந்து விடுவார்கள் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை கூறுகிறது.

தடுப்பூசி இல்லை

குரங்கம்மை பரவும் தன்மையுடைய வைரஸ்தான் என்றாலும் இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது மிகவும் குறைவு என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

குரங்கம்மை பாதிப்புக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி இதுவரை கிடையாது. பெரியம்மை தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமியைப் போன்றே குரங்கம்மையை உண்டாக்கும் வைரசும் இருப்பதால் பெரியம்மை தடுப்பூசியே குரங்கம்மை பாதிப்பில் இருந்து 85 சதவிகிதம் வரை பாதுகாப்பு வழங்கும்.

இரண்டு வகை குரங்கம்மைகள்

குரங்கு அம்மையில் இரண்டு வகை உள்ளன. மேற்கு ஆப்பிரிக்க வகை மற்றும் மத்திய ஆப்பிரிக்க வகை என இதை இரண்டாகப் பிரிக்கிறார்கள்.

அறிகுறிகள்

இந்தத் தொற்று பாதித்தவர்களுக்கு ஆரம்பகட்டத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகு வலி, தசை வலி, சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்படும்.காய்ச்சல் ஏற்பட்டதும் தடிப்புகள் ஏற்படும். இவை பெரும்பாலும் முகத்தில் உண்டாகும். இந்த சிறிய தடிப்புகள் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவும். பொதுவாக உள்ளங்கை மற்றும் பாதங்களில் இந்த தடிப்புகள் வரும். கடைசியாக சிரங்கு போல உண்டாகி உதிர்ந்துவிடும். இந்தக் காயங்களால் தோலில் தழும்பு ஏற்படும்.14 முதல் 21 நாட்கள் வரை நீடிக்கும் இந்தத் தொற்று பிறகு தாமாகவே சரியாகிவிடும்.

பாதிப்புகள்

பொதுவாக குரங்கம்மை பெரிய தீங்கற்ற நோய்தான் என்றாலும் சில நேரங்களில், இது தீவிர பாதிப்புகளை உண்டாக்கும். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இது மரணங்களை உண்டாகியுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.

குரங்கம்மை வைரஸ் எப்படி பரவும்?

ஏற்கெனவே பாதிப்புக்கு உள்ளான ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலம் குரங்கம்மை நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும்.
தோலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் மூச்சுக் குழாய் வழியாகவும், வாய், மூக்கு, மற்றும் கண்கள் வழியாகவும் மனித உடலுக்குள் குரங்கம்மையை ஏற்படுத்தும் வைரஸ் கிருமி நுழையும். குரங்கம்மை பாலியல் ரீதியாகப் பரவும் நோய் என்று கூறப்பட்டதில்லை. ஆனால், இது உடலுறவின்போது ஒருவருடன் ஒருவர் உடல் ரீதியாக நெருக்கமான தொடர்பில் இருந்தாலே பரவக்கூடியது.

நோயால் பாதிக்கப்பட்ட குரங்கு, அணில், எலி போன்ற விலங்குகளுடன் தொடர்பில் இருக்கும்போதும், குரங்கம்மையை உண்டாக்கும் வைரஸ் கிருமி படிந்துள்ள படுக்கைகள் ஆடைகள் போன்றவை மூலமும் இக்கிருமி பரவுகிறது.

டைபாய்டு காய்ச்சல்

குடல் காய்ச்சல் என்றும் அழைக்கப்படும் டைபாய்டு காய்ச்சல், சால்மோனெல்லா பாக்டீரியாவால் ஏற்படுகிறது. ஒரு சிலரே பாக்டீரியாவைக் கொண்டு செல்லும் இடங்களில் டைபாய்டு காய்ச்சல் அரிதானது. கிருமிகளைக் கொல்ல நீர் சுத்திகரிக்கப்படுவதும், மனிதக் கழிவுகளை அகற்றுவதும் அரிதாகவே உள்ளது. டைபாய்டு காய்ச்சல் அரிதாக இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் அமெரிக்கா. அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் அல்லது வழக்கமான வெடிப்புகள் உள்ள இடங்கள் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் உள்ளன.

இது மிகவும் பொதுவான இடங்களில், குறிப்பாக குழந்தைகளுக்கு, கடுமையான உடல்நல அச்சுறுத்தலாகும். அதில் உள்ள பாக்டீரியாக்களுடன் உணவு மற்றும் தண்ணீர் டைபாய்டு காய்ச்சலை உண்டாக்குகிறது. சால்மோனெல்லா பாக்டீரியாவைக் கொண்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பும் டைபாய்டு காய்ச்சலை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்:

அதிக காய்ச்சல்.
தலைவலி.
வயிற்று வலி.
மலச்சிக்கல் (அ) வயிற்றுப்போக்கு.

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் எனப்படும் பாக்டீரியாவைக் கொல்லும் சிகிச்சையைத் தொடங்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு, டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் நன்றாக உணர்கிறார்கள். ஆனால் சிகிச்சையின்றி, டைபாய்டு காய்ச்சலின் சிக்கல்களால் இறப்பதற்கு ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது. டைபாய்டு காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசிகள் சில பாதுகாப்பை அளிக்கும். ஆனால் சால்மோனெல்லாவின் பிற விகாரங்களால் ஏற்படும் அனைத்து நோய்களிலிருந்தும் அவர்களால் பாதுகாக்க முடியாது. தடுப்பூசிகள் டைபாய்டு காய்ச்சலின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

தொகுப்பு: இளங்கோ

The post பரவும் தொற்று நோய்கள்… appeared first on Dinakaran.

Related Stories: