புலிகள் மற்றும் காட்டுபன்றியின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.புலிகள் இறந்து கிடந்தது தொடர்பாக அந்தப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையில், காட்டுப்பன்றியை கொல்ல வனப்பகுதியில் விஷம் வைத்தது மேற்கு வங்கத்தை சேர்ந்த சூரியநாத் பராக் (வயது 35), அமன் கொயாலா (27), சுபித்நின்வார் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
The post நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே புலிகளை விஷம் வைத்துக் கொன்றதாக 3 வடமாநில தொழிலாளர்கள் கைது.! appeared first on Dinakaran.