குடியுரிமை அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை கம்ப்யூட்டரில் பரிசோதித்த போது, காசர்கோடு மாவட்ட போலீசாரால், இணையதள மோசடி வழக்கில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரிய வந்தது.
இதையடுத்து ஹிபத்துல்லாவை சுற்றி வளைத்து பிடித்த குடியுரிமை அதிகாரிகள், அவருடைய அபுதாபி பயணத்தை ரத்து செய்தனர். அதோடு குடியுரிமை அதிகாரிகள், கேரள மாநில போலீசுக்கு இந்த தகவலையும் தெரிவித்தனர். மேலும், சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஹிபத்துல்லா ஒப்படைக்கப்பட்டு, அங்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் காசர்கோடு தனிப்படை போலீசார், ஹிபத்துல்லாவை கைது செய்து, கேரளா அழைத்து செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.
The post அபுதாபிக்கு தப்பி செல்ல முயற்சி இணையதள மோசடியில் தேடப்பட்ட கேரள இளைஞர் சென்னையில் கைது appeared first on Dinakaran.