மாணவர்கள் போராட்டத்தின் போதும் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து விலகிய பிறகும் நடந்த வன்முறைகளில் 650 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 11 வரை 650 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜூலை 16 முதல் ஆக.4 வரை 400 பேரும், ஆக.5,6 ஆகிய 2 நாட்களில் மட்டும் 250 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐநாவின் நிபுணர்குழு நேற்று வங்கதேசத்துக்கு வந்தது. இந்த குழுவினர் ஒரு வாரம் தங்கியிருந்து விசாரிப்பார்கள்.
The post வங்கதேச போராட்டத்தில் 650 பேர் படுகொலை குறித்து விசாரிக்க ஐநா குழு வருகை appeared first on Dinakaran.