சென்னை சென்டரலில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரயில் பகுதிநேரமாக திருவள்ளூர்-திருத்தணி இடையே ரத்து செய்யப்படுகிறது. திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்படும் சென்னை சென்டரல் வரும் மின்சார ரயில் பகுதிநேரமாக திருத்தணி-திருவள்ளூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்டரலில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் திருப்பதி செல்லும் மின்சார ரயில், சென்னை சென்டரல்-திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும் மின்சார ரயில், சித்தேரி-அரக்கோணம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் நாளை பகுதி நேரமாக ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.