தனியார் சுயநிதிப் பள்ளிகளில் என்சிசி, என்எஸ்எஸ், ஸ்கவுட் மற்றும் ஜேஆர்சி போன்ற அமைப்புகள் செயல்படுகின்றன. அந்த அமைப்புகளை பள்ளிகளில் செயல்படுத்த மாநில அமைப்பிடம் முறையாகப் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். வெளியிடங்களில் முகாம் நடத்தப்பட வேண்டியிருந்தால், பெற்றோர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலமாகவும், மாணவிகளுக்கு பெண் ஆசிரியைகள் மூலமாகவும் மட்டுமே பயிற்சிகள் வழங்க வேண்டும். அனுமதி இல்லாமல் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
The post அனுமதியின்றி முகாம் நடத்தினால் கடும் நடவடிக்கை: தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை appeared first on Dinakaran.