துணைத்தலைவர் கிலாரி ராஜேஷ், செயலாளர் அவந்திகா ராஜேஷ் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் லீலா வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு மாணவர்களிடம் சைபர் க்ரைம் பாதுகாப்பு குறித்து பேசினார். பின்னர் 10, 11, 12ம் வகுப்புகளில் முதல் இடத்தை பிடித்த மாணவ – மாணவிகள் 50 பேருக்கு பரிசுகள் வழங்கினார். மேலும் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தமிழ்நாடு அளவில் நடந்த தடகளம், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கினார்.
The post ஊத்துக்கோட்டை அருகே மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி: முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்பு appeared first on Dinakaran.