இந்தநிலையில் சுரேஷை பார்ப்பதற்காக நேற்று அவரது வீட்டிற்கு உறவினர் ஒருவர் வந்துள்ளார். அப்போது சுரேஷ் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுரேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மனைவி கோபித்துகொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால் மன உளைச்சலில் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post மனைவி கோபித்து சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.