ஜாமீனில் வந்து சதி திட்டம்: 3 ரவுடிகள் கைது

மாதவரம்: புளியந்தோப்பு பகுதியில் முன்விரோதம் காரணமாக, சிலர் சதி திட்டத்தில் ஈடுபடுவதாக புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் சிபுக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று போலீசார் புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த திருணா (எ) திருநாவுக்கரசு (26), அப்பு (எ) அஜய் (23), அருண் (22) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில், இவர்கள் மூவரும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மனோ என்பவரை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது, ஜாமீனில் வெளியே வந்தவர்கள், எதிர்த்தரப்பை சேர்ந்தவர்களை கொலை செய்ய மீண்டும் சதித்திட்டம் தீட்டியது தெரிந்தது. அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

The post ஜாமீனில் வந்து சதி திட்டம்: 3 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: