அவற்றை பறிமுதல் செய்து 3 பேரின் பயணங்களையும் அதிகாரிகள் ரத்து செய்தனர். விசாரணையில் சதுப்பு நில பகுதிகளில் இருந்து இந்த நட்சத்திர ஆமைகளை பிடித்து கடத்தி செல்வதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதேபோல கோலாலம்பூரில் இருந்து விமான மூலம் சென்னை வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பயணி ஒருவரிடம் 1500 இ-சிகரெட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் அவற்றின் மதிப்பு ரூ.37 லட்சம் என தெரியவந்தது. அந்த பயணியை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சென்னையில் இருந்து மலேசியா, கோலாலம்பூருக்கு கடத்தல் முயற்சி.. 780 நட்சத்திர ஆமைகள் மற்றும் 1500 இ-சிகரெட்டுகள் பறிமுதல்!! appeared first on Dinakaran.