25 கிலோ நகையுடன் தப்பிய வங்கிமுன்னாள் மேலாளர் கைது

ஹைதராபாத்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 25 கிலோ தங்க நகைகளுடன் தலைமறைவான வங்கி முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மராட்டிய வங்கியின் வடகரா கிளை முன்னாள் மேலாளர் மது ஜெயக்குமாரை தெலுங்கானாவில் போலீஸ் கைது செய்தது. வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை திருடிக் கொண்டு போலி நகைகளை வைத்துவிட்டு தலைமறைவானார். தெலுங்கானாவில் பதுங்கி இருந்த மது ஜெயக்குமாரை கேரள போலீசார் கைது செய்தனர்.

The post 25 கிலோ நகையுடன் தப்பிய வங்கிமுன்னாள் மேலாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: