அதன்பின், அரங்கத்தில் உள்ள கால்நடைகள் குறித்த அருங்காட்சியகம் மற்றும் நூலகங்கள், மினி தியேட்டர் ஆகியவற்றை பார்வையிட வார நாட்களில் 100 பேரும், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் 500 பேர் வீதம் மாதத்திற்கு, சுமார் 7 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர்.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த இந்த அரங்கம், கடந்த 9ம் தேதி முதல் சுற்றுலாத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரங்கத்தில் மாவட்டத்தின் சுற்றுலா வருவாயை பெருக்கும்விதமாக சாகச சுற்றுலாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இளம் தலைமுறையினரை கவரும் விதமாக மலையேற்றம், காத்தாடி விழா, ஏர் பலூன், ஜிப்லைன், சைக்களிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளன. மேலும், தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பறைசாற்றும்விதமாக, பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. இதற்கான, அரசாணை விரைவில் வெளியாக உள்ளது. அரசாணை வெளியான பின், கலை நிகழ்ச்சிகளும், சாகச சுற்றுலா திட்டமும் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும். இதனால், பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், சுற்றுலா வருவாயும் உயரும் என, மாவட்ட சுற்றுலாத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post களை கட்டப்போகுது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் சாகச சுற்றுலா: சுற்றுலாத்துறை புதுமுயற்சி appeared first on Dinakaran.