சுதந்திர தினம், தொடர் விடுமுறையையொட்டி பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் இருந்து இன்று, நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: சுதந்திர தினம், தொடர் விடுமுறையையொட்டி இன்று , நாளை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேட்டிலிருந்து தி.மலை, வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை 365 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 20 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 1190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் 18ம் தேதி சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

The post சுதந்திர தினம், தொடர் விடுமுறையையொட்டி பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கம், கோயம்பேட்டில் இருந்து இன்று, நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: