இங்கு பட்டவராயர் கோயில் எதிரே உள்ள தாமிரபரணி ஆற்றின் தடாகத்தில் அனைவரும் குளித்துள்ளனர். அப்போது முருகன் மகள்கள் கல்லூரி மாணவி மேனகா (18), பள்ளி மாணவி சோலை ஈஸ்வரி (15), சிவகாசி அருகே நாரணம்மாள்புரத்தை சேர்ந்த மாரீஸ்வரன் (27) ஆகிய 3 பேரும் திடீரென நீரில் மூழ்கி உள்ளனர். நீச்சல் தெரியாததால் அவர்கள் காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர்.
உடனே, உறவினரான வில்லிபுத்தூர் வன்னியம்பட்டியை சேர்ந்த சங்கரேஸ்வரன் (40) என்பவர் 3 பேரை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் அவரும் ஆற்றில் மூழ்கினார். இதைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஆற்றிற்குள் குதித்து காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் மாரீஸ்வரனை மட்டும் மீட்க முடிந்தது. மற்ற 3 பேரை தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் வீரர்கள், சுமார் 1 மணி நேரம் போராடி ஆற்றில் மூழ்கிய 3 பேரை சடலமாக மீட்டனர்.
The post தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சகோதரிகள் உள்பட 3 பேர் சாவு appeared first on Dinakaran.