இதுகுறித்து பெரவள்ளூர் போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, கடந்த 4ம் தேதி, கபிலனை கைது செய்தனர். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், கபிலனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் 5வது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கபிலனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து பெரவள்ளூர் போலீசார் பாஜ மாவட்ட தலைவர் கபிலனிடம் விசாரிக்க உள்ளனர்.
The post முதல்வர் குறித்து அவதூறு பாஜ மாவட்ட தலைவருக்கு 2 நாள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.
