இதற்கு லஞ்சமாக ₹17,000 சேர்த்து ₹30,000 கொடுக்கும்படி கூறியுள்ளார். பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜகோபாலை (45) சந்தித்து பேசியபோது, உதவியாளர் சிவக்குமார் கேட்ட பணத்தை கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக குமரேசன், கரூர் மாவட்ட லஞ்சஒழிப்பு துறையில் புகார் கொடுத்தார். அவர்களது ஆலோசனைப்படி லஞ்ச பணம் ₹17ஆயிரத்தை நேற்று சோழபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ராஜகோபால், உதவி அலுவலர் சிவக்குமாரிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் ராஜகோபால் நேற்று, முதல் நிலை பேரூராட்சி செயல் அலுவலராக பதவி உயர்வு பெற்று பணி மாறுதலில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி செல்ல வேண்டியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post சொத்துவரி நிர்ணயம் செய்வதற்கு ரூ.17,000 லஞ்சம் வாங்கிய செயல் அலுவலர் கைது appeared first on Dinakaran.