மேலும் அந்த பள்ளி வளாகத்திலேயே கூடுதல் வகுப்பறையை கட்ட கடந்த பிப்ரவரி மாதம் பூஜை போட்டு புதிய பள்ளி கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிய பள்ளி கட்டிடத்தின் பணிகளை துரை சந்திரசேகர் எம்எல்ஏ நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணை தலைவர் அலேக்சாண்டர், திமுக பேரூர் செயலாளர் தமிழ்உதயன், மீஞ்சூர் கோதண்டம், கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகி கதிர்வேல், முன்னாள் திமுக நகர செயலாளர் மோகன்ராஜ், குரு சாலமன், அன்பரசு, குமார் மற்றும் காங்கிரஸ், திமுக கட்சி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, அருகில் உள்ள பள்ளி சத்துணவு கூடத்திற்கு சென்ற எம்எல்ஏ துரை சந்திரசேகர் அங்கு பார்வையிட்டு குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவை சாப்பிட்டு ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.
The post மீஞ்சூர் பேரூராட்சி ஆதிதிராவிடர் நல பள்ளியில் ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டிலான கட்டுமான பணிகளை எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.