ஓட்டல் பராமரிப்பு பணியின்போது கல்லாவில் கை வைத்தவர் சிக்கினார்

 

திருச்சி, ஆக.9: ஓட்டல் பராமரிப்பு பணியின்போது கல்லாவில் கை வைத்தவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். திருச்சி தில்லை நகரில் இயங்கி வரும் பிரபல ஓட்டல் ஒன்றில், மராமத்து பணிகள் நடந்தது. அப்போது, ஓட்டல் கல்லா பெட்டியில் இருந்த ரூ.1.40 லட்சம் பணம் மாயமானது. அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் தில்லை நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது கடந்த ஆக.1ம் தேதி மர்ம நபர் ஒருவர் ஓட்டலில் புகுந்து, கல்லாவில் இருந்த பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. மேலும், விசாரணையில், அவர் ஒரு பழைய திருடன் என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். திருடியதை அந்த நபர் ஒப்புக்கொண்டாராம். ஆனால் திருடிய பணம் முழுவதும் செலவாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓட்டல் பராமரிப்பு பணியின்போது கல்லாவில் கை வைத்தவர் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: