இதற்கு பதிலளித்து ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், ‘‘தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி வழங்குவதில் நாங்கள் எந்தவித வரையறையும் வைத்திருக்கவில்லை. ரூ.2000 கோடி அல்ல, ரூ.5000 கோடியை கூட ஒதுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏற்கனவே இதுகுறித்து நாங்கள் பல்வேறு முடிவுகளையும் மேற்கொண்டு உள்ளோம். இருப்பினும் இதுதொடர்பாக நீங்கள் அதற்கான பரிந்துரையையும், நிலம் கையகப்படுத்துதலையும் உறுதி செய்ய வேண்டும். இதையடுத்து அதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசும் மேற்கொள்ளும்‘‘ என்று கூறினார்.
The post தமிழ்நாட்டுக்கு ரூ.2000 கோடியை உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும்: மாநிலங்களவையில் திமுக எம்.பி.கே.ஆர்.என்.ராஜேஷ் கோரிக்கை appeared first on Dinakaran.