இந்த கிராம மக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் பெரிய ஊராட்சியாக இருப்பதால் சரிவர கிடைப்பதில்லை. குறிப்பாக குடிநீர் வசதி, சுகாதார வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி, மழை நீர் வடிகால் வசதி, ரேஷன் கடையின்மை, கல்வி வசதி மற்றும் நல திட்டங்கள் இந்த மூன்று வருவாய் கிராம பொதுமக்களுக்கு சரிவர கிடைப்பதில்லை. மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுக 13 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி இருப்பதாலும், திட்டப் பணிகள் மற்றும் நிவாரணம் பெறுவதில் சிரமம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே பொதுமக்களின் கோரிக்கைகள், அடிப்படை வசதிகள், அரசின் நல திட்டங்கள், நல திட்ட உதவிகள் விரைவாக கிடைக்க 3 ஊராட்சி பகுதிகளாக பிரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக திருவள்ளூர் அருகே 6 வழி சாலை பணிகளை ஆய்வு செய்ய வந்த இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமும் கோரிக்கை மனுவை அளித்தனர்.
The post வடமதுரை ஊராட்சியை வருவாய் கிராம அடிப்படையில் 3 ஊராட்சிகளாக பிரிக்க கோரிக்கை: கலெக்டரிடம் கிராம மக்கள் மனு appeared first on Dinakaran.