அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தன்னார்வலர்கள் இணைந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சப்பாத்திகளை தயார் செய்து தனித்தனி பாக்கெட்டுகளாக கட்டி பெட்டிகளில் அடுக்கி நேற்று இரவு வயநாட்டிற்கு வேனில் அனுப்பி வைத்தனர். இது மட்டுமல்லாது அத்தியாவசிய தேவைகளான டூத்பேஸ்ட், பிஸ்கட், சோப், போர்வை உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
The post வயநாட்டில் நிலச்சரிவால் பாதித்த மக்களுக்கு அவிநாசியில் இருந்து 5 ஆயிரம் சப்பாத்தி: தன்னார்வலர்கள் அனுப்பி வைத்தனர் appeared first on Dinakaran.