இந்தநிலையில், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தான் உண்டியலில் சிறுக, சிறுக சேமித்து வைத்த ₹2 ஆயிரத்தை வழங்க முடிவு செய்தார். இதற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 2 ஆயிரத்தை வழங்கியுள்ளார். மாணவர் கார்த்திக் ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது தனது உண்டியல் பணம், தனது சகோதரி திவ்யஸ்ரீயின் உண்டியல் சேமிப்பு ஆகியவற்றை சேர்ந்து மொத்தம் ₹3855 ஐ தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண உதவிக்கு வழங்கினார்.
The post கேரள நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டியல் சேமிப்பு பணம் 2 ஆயிரம் வழங்கிய மாணவர் appeared first on Dinakaran.