பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரம்

 

அரியலூர், ஆக 3: அரியலூர் மேலத்தெருவிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த கோயிலான பெரியநாயகி அம்மனுக்கு ஆடி 3 ஆம் வெள்ளியையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பெரியநாயகி அம்மன் பல்வேறு வகையான மூலிகைகள், பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் அம்மனுக்கு பட்டுப் புடவைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபதாரனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரம் appeared first on Dinakaran.

Related Stories: