11ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்படும். பிராந்திய அளவில் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். பாடப்பிரிவு வாரியாக 100க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிபுரியும் பெண்கள், மின்சார இருசக்கர வாகனம் வாங்க 23 சதவீதம் மானியம் வழங்கப்படும். 500 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். சூரிய ஒளி மின்சாரம் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் வீடுகளில் நெட் மீட்டருடன் 2 கிலோ வாட் உற்பத்தி செய்ய 90% விழுக்காடு மானியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
The post புதுச்சேரியில் மீண்டும் இலவச அரிசி, சர்க்கரை கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000: பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.