ஆந்திராவில் இருந்து ரயிலில் 6 கிலோ கஞ்சா கடத்திய தனியார் பள்ளி ஆசிரியர் கைது

சென்னை: ஆந்திராவில் இருந்து ரயிலில் 6 கிலோ கஞ்சா கடத்திய தனியார் பள்ளி ஆசிரியர் அரவிந்த்சாமி கைது செய்யப்பட்டுள்ளார். திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அரவிந்த்சாமி மதுரை தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் என்றும், கஞ்சா வாங்க ஆந்திரா சென்றது அம்பலம் ஆகியுள்ளது. திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் ரயில் மெதுவாக செல்லும்போது அரவிந்த்சாமி குதித்து இறங்கியதும் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

The post ஆந்திராவில் இருந்து ரயிலில் 6 கிலோ கஞ்சா கடத்திய தனியார் பள்ளி ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: