நீட் முறைகேடு வழக்கு: ஒன்றிய விசாரணை அமைப்புகள் ஒத்துழைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நீட் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2019-ல் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் 4 மாதத்தில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீட் முறைகேடு என்பது சமுதாயத்தை பாதிக்கக்கூடியது; இதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஒன்றிய விசாரணை அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் சிபிசிஐடி நீதிமன்றத்தை நாடலாம் என நீதிபதி புகழேந்தி கூறியுள்ளார்.

 

The post நீட் முறைகேடு வழக்கு: ஒன்றிய விசாரணை அமைப்புகள் ஒத்துழைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: