பெற்றோர் கண்டித்ததால் கிணற்றில் குதித்த மாணவன் உயிருடன் மீட்பு

பாடாலூர், ஆக. 1: படிக்கச் சொல்லி பெற்றோர் கண்டித்ததால், விரக்தியடைந்து, கிணற்றில் குதித்து, தற்கொலைக்கு முயன்ற பிளஸ் 2 மாணவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பாடாலூர் அடுத்த ஆலத்தூர் பகுதி விவசாயி 17 வயது மகன். இவர், அதே பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். மாணவனுக்கு படிப்பில் ஆர்வமின்றி இருந்ததாகத் கூறப்படுகிறது. இதனால், அவரை பெற்றோர் நன்றாக படிக்க சொல்லி கண்டித்துள்ளனர். இதனால், விரக்தியடைந்த மாணவன் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் வீட்டருகே வயலில் 30 அடி ஆழம் கொண்ட தண்ணீர் உள்ள கிணற்றில் குதித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது, 20 அடி திட்டில் விழுந்து கிடந்த சிறுவனின் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் எட்டி பார்த்தனர். இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாகு தலைமையிலான வீரர்கள் கிணற்றில் இறங்கி, கயிறு கட்டி மாணவனை உயிருடன் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

The post பெற்றோர் கண்டித்ததால் கிணற்றில் குதித்த மாணவன் உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: