டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்பாடு உள்ளதா? கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர், ஆக. 1: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சில டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்பாடு உள்ளதா? என்பதூ குறித்து கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறதூ. கரூர் மாநகராட்சியில் கொசுவலை, பஸ்பாடி மற்றும் ஜவுளி நிறுவனங்கள் என மூன்று முக்கிய தொழில்களை உள்ளடக்கிய மாநகரமாக உள்ளது. இந்த தொழில்களில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதூபோன்ற தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களை மையப்படுத்தி கரூர் மாநகராட்சி பகுதியில் நூற்றுக்கணக்கான டீக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த டீக்கடைகளில் சில கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்பாடு உள்ளதூ எனக் கூறப்படுகிறது. கலப்பட டீத்தூள் பயன்பாடு காரணமாக, பல்வேறு நோய்களுக்கு அதனை பயன்படுத்துபவர்கள் ஆளாக நேரிடும் எனவும் கூறப்படுகிறது.கரூர் மாநகரப் பொறுத்தவரை அதிகளவு தொழிலாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் டீக்குடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். எனவே, கலப்பட டீத்தூள் பயன்பாடு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனையிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட தூறை அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி கலப்பட டீத்தூள் பயன்பாடு உள்ளதா? என்பது குறித்தூ கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

The post டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்பாடு உள்ளதா? கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: