ராமலிங்கபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

 

பாடாலூர், ஜூலை 31: ஆலத்தூர் அருகேயுள்ள அல்லிநகரத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் 553 மனுக்கள் பெறப்பட்டன. ஆலத்தூர் அடுத்த ஜெமீன்பேரையூர், புஜங்கராயநல்லூர், அருணகிரிமங்கலம், ராமலிங்கபுரம், சில்லக்குடி, ஜெமீன் ஆத்தூர் ஆகிய கிராம ஊராட்சிகளை சேர்ந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் ராமலிங்கபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்தது. முகாமை டிஆர்ஓ வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) சுந்தர்ராமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ் குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முகாமில், எரிசக்தி துறை, தமிழ்நாடு மின்சார வாரிய துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவு மற்றும் உணவுப்பாதுகாப்புத்துறை, வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, உள் துறை (காவல்), மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, வேளாண் உழவர் நலத்துறை,

கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறை, மாவட்ட தொழிற்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகிய 15 அரசுத்துறைகளில் வழங்கப்படும் 45 சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா். இதில், பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 553 மனுக்கள் பெறப்பட்டன. இதில், தாசில்தார்கள் சத்தியமூர்த்தி, பழனிச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ராமலிங்கபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Related Stories: