இதுகுறித்து போளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதனால் அருகே உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. ஆனால் டீக்கடையில் இருந்த பாய்லர், 3 பிரிட்ஜ், 1 சர்க்கரை மூட்டை, 2 சிலிண்டர், பிஸ்கட், பேக்கரி பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், யாராவது மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தார்களா, அல்லது எப்படி தீ விபத்து ஏற்பட்டது என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடையின் அருகே ஏதேனும் சிசிடிவி கேமரா உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். டீக்கடையில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்தனர்.
The post தி.மலை அருகே நள்ளிரவில் ஆவின் டீக்கடை தீ வைத்து எரிப்பு?: சிலிண்டர் வெடித்ததால் பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.