தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் தி.நகரில் நாளை காமராஜர் பிறந்தநாள் விழா: மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன் ஏற்பாடு

சென்னை: தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா சென்னை தி.நகர் சர்.பி.டி.தியாகராயர் அரங்கில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.ஏ.முத்தழகன் தலைமை தாங்குகிறார். தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர் இல.பாஸ்கரன் முன்னிலை வகிக்கிறார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் கே‌.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார், அகில இந்திய செயலாளர் சி.டி.மெய்யப்பன், அசன் மௌலானா எம்எல்ஏ, முன்னாள் எம்‌பி ராணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

ஏ.எஸ்‌.ஜார்ஜ், செல்வகுமார், ரெங்கநாதன், வடபழனி பாபு, ஏழுமலை, ராஜபாண்டி, ரா‌ஜமாணிக்கம், சி.கே‌. கணேஷ், செஞ்சி முத்தமிழ்மன்னன், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்புரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் துணை தலைவர் கோபண்ணா, டாக்டர் கந்தசாமி, தேவராஜ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. மாவட்ட மூத்த காங்கிரஸ் முன்னோடிகள் கௌரவிக்கப்படுகிறார்கள். மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியில் நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. தலைமை நிலைய செயலாளர்கள் மன்சூர் அலிகான், பூபதி, சம்பத், வட்ட தலைவர் ராஜன் ஆகியோர் நன்றியுரை ஆற்றுகிறார்‌கள்.

 

The post தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் தி.நகரில் நாளை காமராஜர் பிறந்தநாள் விழா: மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன் ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: